காதலெனும் வார்த்தையின் புரிதல் சமூகம், தனிமனிதன் என்ற அடையாளங்களுக்கேற்ப மாறுகிறது. அதற்கென ஆதிமுதல் சேர்க்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட காரணிகள் அதன் வேலையை செவ்வனெ செய்கிறது. அலர் தூற்றல் சங்கம் முதல் சமூக கடமையென தொடரும் வன்முறை. வீட்டில் நிகழும் வன்முறைகள், சமூக எதிர்பார்ப்பிற்கேற்ப, சமூக பின்விளைவுகளை மனதிற் கொண்டு கூடவோ, குறையவோ செய்கிறது.
சமூகத்தின் போலி எதிர்பார்ப்புகளில் இருந்து தன் அன்பின் எச்சங்களை, வாழ்வின் அர்த்தங்களை காத்திட வேண்டிய பெற்றோர்கள், மூர்க்கத்தனமாக அன்புகொண்ட நெஞ்சங்களின் தேடல்களை கருக்கி, ஒழுக்க விதிகளின் ஒட்டுமொத்த உருவம் என் பிள்ளை என பெருமைப்படும் காகித மனிதர்கள்.
காலம் காலமாக காதல் கட்டுப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்மைதான். விவரிக்கவியலா எண்ண ஓட்டங்களும், உணர்ச்சி வசப்பட்ட எதிர்பார்ப்புகளும் கொண்ட பெண்மை, தொடர்ச்சியாக தன் எதிர்பார்ப்புகளை கருக்கிக்கொண்டு, தன் மனதைக் கொன்று, பொற்றோர் இட்டது சட்டமென தன் வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கிறது.
இதில் பெருங்கொடுமை Honour Killings எனப்படும் சைக்கோ கொலைகள். ஆயிரமாயிரம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் கனவுகளோடு சேர்த்து தங்களையும் இழந்து கரந்து போகின்றனர். இது எத்துனை நாட்கள் இப்படியே நகரும்? பெண்மை பெரும் அழிவுசக்தியாக கட்டமைக்கப்பட்ட இந்த சமுதாய, மத, இலக்கிய கற்பனைகள் வெறும் கனவா??
இல்லை அது தன் இயல்பை மீட்டெடுக்கும் நாட்கள் அரங்கேறுகின்றன, அதற்கு அச்சாரமாய் ஹரியான மாநில, கபூல்புர் கிராமத்தை சேர்ந்த சோனம் என்ற பெண் கிளம்பியுள்ளார்.
ஒரே கோத்திரம், மூத்திரம் என உதவாத சாத்திர கதைகளை சொல்லி தன் காதலைபிரிக்க நினைத்த தன் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொன்று தன் வெறியாட்டை நிகழ்த்தியிறுக்கிறார். இனி இது தொடர் கதையாய் நிகழ வாய்ப்பிருக்கிறது.
மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.
தன் காதலின் வலி தெரியாமல் தூங்கும் ஊரை ஒரு வழி செய்திவிடுவதாக பெண்புலியென உறுமும் அவ்வையார்களை நாம் வைதீக மூட்டைகளின் கட்டுப்பாட்டில் எங்கோ தொலைத்துவிட்டோம். What goes around, comes around!
எத்தனை காலம் தான் பெண்கள் அடங்கி அடிமையாய் வாழ்க்கையை தொலைத்து நடைபிணங்களாய் மடிவார்கள்? இது நாள் வரை சமூகமும், குடும்பமும் காதலர்களை கொன்று குவித்த காலித்தனத்திற்கொல்லாம் பதிலிறுக்க புறப்பட்ட சோனத்திற்கு என் வந்னங்கள்.
உதவாத காரணங்களுக்கெல்லாம் கொலைகள் நிகழ்தப்படும் இந்த காலத்தில், lets kill some parents for the sake of love. கொலை தீர்வாகிவிடுமா என ethical questioning எழுப்பும் மி.கி.மா’களுக்கு... மவனே அடுத்த டார்கொட் நீதான்... உஷாரா இருந்துக்கோ.