வியாழன், 17 டிசம்பர், 2009
Cubicle Chaos
வெள்ளி, 11 டிசம்பர், 2009
ஆரஞ்சுநிறப்பரிதி
புதன், 2 டிசம்பர், 2009
தேவநாதனின் பிந கட்டுடைத்தல் அல்லது அம்பி தேவநாதான் வாழ்க!
செவ்வாய், 10 நவம்பர், 2009
தொடர் விளையாட்டு
பிடித்தவர் : தொலைநோக்கோ, இனப்பற்றோ, தெளிவோ, உறுதியோ யாரிடமும் இல்லை. வரும் நாட்களில் திருமா கவனிக்கப்படலாம்.
பிடிக்காதவர்: ஜெ, வைகோ
2.எழுத்தாளர்
பிடித்தவர் : அவ்வளவாக படிப்பதில்லை, சமீபத்தில் வியந்த படைப்பாளி என்றால் தோப்பில் முகமது மீரான்இவரைத்தெரியவில்லை என்றால் நீங்கள், ஜெமோ, சுரா, எஸ்ரா, மபு வகையாரா என நினைக்கிறேன்). ஜே.பி சாணக்யா, கி ராஜநாராயணன் விருப்பம். என்றென்றும் கலைஞர். ரமேஷ்:பிரேம். ஒரு புளியமரத்தின் கதைக்காக : சுரா
பிடிக்காதவர் : எல்லோருமே பிடிக்காதவர்கள் தான். எனினும் எழுதும் மன உறுதிக்காக யாரையும் குறிப்பாக சொல்ல விருப்பமில்லை. வேர்களைத் தேடி பதிய முயலுங்கள், அதுமட்டுமே என் வேண்டுகோள்.
3.கவிஞர்
பிடித்தவர் : கல்யாண்ஜி, ரமேஷ்:பிரேம், விக்கிரமாதித்தியன், கலைஞர்.. புதிதாய் எழுதும் எவரும் பரிச்சயமில்லை.
பிடிக்காதவர் : எல்லோருமே பிடிக்காதவர்கள் தான். எனினும் எழுதும் மன உறுதிக்காக யாரையும் குறிப்பாக சொல்ல விருப்பமில்லை. வேர்களைத் தேடி பதிய முயலுங்கள், அதுமட்டுமே என் வேண்டுகோள். :)
4.இயக்குனர்
பிடித்தவர்: பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலா, சேரன், செல்வராகவன்
பிடிக்காதவர் : பெரும்பாலான இயக்குனர்கள்.
5.நடிகர்
பிடித்தவர் : கமல், விஜய், ரஜினி, பிரகாஷ்ராஜ் (தமிழை அழகாக பேசுவதற்காகவே இவர் மீது பெருமதிப்புண்டு), ரகுவரன், கவுண்டர், வடிவேலு, ராமராஜன் (தெளிவான, நேர்மையான பாத்திரங்களுக்காக-எம்ஜிஆருக்கு அடுத்தது அப்படி முயன்ற ஒரே நடிகர் எனலாம்)
பிடிக்காதவர் : பெரும்பாலான நடிகர்கள்
6.நடிகை
பிடித்தவர் : மாதவி, பானுப்பிரியா, ரேவதி, அர்ச்சனா, கோவை சரளா, ராதா, அம்பிகா
பிடிக்காதவர் : நடிகைகளுக்காக படம் பார்த்ததில்லை. எனவே பிடிக்காதவர் என்று குறிப்பிட்டுச் சொல்ல யாரும் இல்லை
7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர்: யாரையும் தேடிச்சென்று கேட்பதில்லை.
8. பாடகி & பாடகர்
பிடித்தவர் : டிஎம் எஸ், பிபிஎஸ், இளையராஜா, ஏசுதாஸ், சுசீலா, சித்ரா, ஜானகி, ஸ்ரேயா கோஷல்,
பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை. தமிழை கொல்லும் இந்தி பாடகர்களை அழைத்து வருவரும் இசை அமைப்பாளர்கள்.
9. தொலைகாட்சி நிகழ்ச்சி
பிடித்தது : ஜெயா மேக்ஸ் பாடல்கள்
பிடிக்காதது : மற்ற அனைத்தும்
10. சமீபத்தில் ரசித்த திரைப்படம்
பிடித்தது : சுப்பிரமணியபுரம், பசங்க
பிடிக்காதது: சொல்ல நினைப்பது : (நீங்க இன்னும் வளரணும் தம்பி)
வெள்ளி, 30 அக்டோபர், 2009
ஞாயிறு, 20 செப்டம்பர், 2009
Its time to kill the PARENTS!
சனி, 1 ஆகஸ்ட், 2009
கலித்தொகை - ஓடிப்போன மகள் - தேடும் தாய்
எட்டுத்தொகை நூல்களில் ஒன்று, சங்க இலக்கியம். சீரற்ற அடிகளில் சற்றே பெரிய பாடல்களாய் 150 காதல் பாடல்கள். திணைக்கு முப்பது பாடல்களாய், ஐந்து திணைக்கு 150 பாடல்கள். அனைத்துமே காதலின் பல்வேறு பரிமாணங்களை சங்கப் பார்வையில் சொல்கிறது.
கற்றரிந்த ஒரு சான்றோர் கூட்டம் அவ்வழி சொல்கிறது, அவர்களிடம் தன் ஓடிப்போன மகளைப் பற்றி கேட்கிறார் அந்த தாய். அதற்கு அவர்கள் கூறும் பதிலுரை மிகவும் யதார்த்தமாக, உண்மையை நச்சென்று உரைப்பதாகவும் - அந்தகாலத்தில் காதலுக்கு இருந்த மரியாதையை குறித்தும் நமக்கு உண்ர்த்துகிறது. காதலர்கள் மட்டுமே காதலை காக்காமல், ஒட்டுமொத்த சமுதாயமுமே காதலெனும் கொடியை உயர்த்தி பிடிக்கிறது. அச்சான்றோர் பெரும்பாலும் சமண முனிகளாக இருக்கலாம்.
இனி பாடலை கவனிப்போம்.
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!'
'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே
தாய்: அந்தணர்களே, என் மகள் இன்னெரு ஆண் மகனோடு அவ்வழி சென்றதைப் பார்த்தீர்களா? (இங்கு தாய் அந்தணர்களை புகழ்வது, அவர்கள் பொய்யுரைக்க இயலாதவாறு ஒரு சூழலில் அவர்களை கட்டும் நோக்கம் என்றே தோன்றுகிறது - ஐஸ் வைக்கிறது)
அந்தணர்: பார்த்தோம், வேலி (அ) காட்டுப்பக்கம். கவலைப்படாமல் நீங்கள் செல்லுங்கள்.
மலையில் பிறந்தாலும் சந்தனம் மலைக்கு சொந்தமல்ல, கடலில் விளைந்தாலும் முத்து கடலுக்கு சொந்தமல்ல, யாழில் பிறந்தாலும், இசையால் யாழுக்கு ஏதும் பயனில்லை, கேட்பவர்க்கே பயன்.
அதுபோல, உங்கள் மகளும் உங்களுக்கு சொந்தமல்ல. சிறந்தவன் ஒருவனை வழித்தொடர்ந்து சென்றிருக்கிறாள். அதில் தவறொன்றும் இல்லை மற்றும் அதுவே அறமும் ஆகும் என நினைத்து கவலையை விடுங்கள்.
இறந்த கற்பினாட்கு- என்பது மிகுந்த கற்பினள் என்பது பொருள் அல்லது நிறைந்த கற்பினள்
ஓடிப்போவது அப்போதிருந்தே நிகழ்வது. மனதில் வரித்துக்கொண்டவனை விட்டு வேறொருவனுடன் வாழ்வது கற்பாகாது என பெண்கள், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுவது தமிழர் நியதி..
சென்றவளுக்காக வருந்தவேண்டாம் என அந்தணர்கள் –அறிஞர்கள் அந்த அன்னைக்கு அறிவுரை கூறுகின்றனர். இன்றைக்கும் இந்த பாடல் காட்சிகளை நான் அன்றாடம் காண்கிறேம்-(நன்றி தினத்தந்தி -தினமலர், தமிழ்சினிமா).
செய்திக்கும் –செய்யுளுக்கும் எத்துணை வேறுபாடு கூர்ந்து நோக்கின். அவ்வேறுபாடே நம் பண்பாட்டு வீழ்ச்சியை காட்டுகிறது. பழந்தமிழ் வாழ்கையின் எளிமையும், இனிமையும், பண்பும் ஒழிந்து இன்று சாதி, நிறம் என கூறுபட்டு கிடக்கிறது தமிழனின் வாழ்க்கை.
வியாழன், 30 ஜூலை, 2009
கங்கை கொண்ட சோழபுரத்தில் நாயக்கர் சிலை
From Gangaikonda Chozapuram |
From Gangaikonda Chozapuram |