வியாழன், 21 ஜனவரி, 2010

1000த்தில் ஒருவன் - ஈழவீழ்ச்சிக்கு பின்னான மிகமுக்கியமான படைப்பு

ஈழத்துயரத்தை கூவிவிற்று காசாக்குவதாக ஆஓ’வின் மீது எழும் குற்றச்சாட்டுகளை அது எழும்பும் பின்புலம் சார்ந்தே எதிர்கொள்ள வேண்டும். வரலாறு முழுவதும் வன்கொடுமையிலும், அதிகார வர்க்க ஒடுக்குமுறை, பேரினவாத, முதலாலித்துவ, கம்யூனிச என அனைத்து கோட்பாடுகளின் அடக்குமுறைகளாலும் வாழ்வை, எதிர்காலத்தை, இன இருப்பை தொலைத்த மக்கள் கூட்டம், தத்தம் கலை, மொழி, படைப்புகளின் வழியே அந்த வலியை, ஓலத்தை கைமாற்றி தந்தபடியே இருக்கிறது.

ஆன்மையற்ற தமிழினம் மட்டுமே சிறு குற்ற உணர்ச்சியுமின்றி, அதிகார போதைக்கு ஈழ உதிரத்தை ஊறுகாயாக தொட்டுக்கொண்டு, தொலைகாட்சியில் மானட- மாராட, டீலா பூலா என விசனப்பட்டு, மகிழ்வுடன் வாழ்வை கழிக்கிறது. தொடர்ந்து ஒடுக்கப்பட்ட இனத்தின் வரலாற்று உணர்ச்சியை மழுங்கடித்த வேலையை ஆரிய, களப்பிர, தெலுங்கு அரசுகள் செவ்வனே செய்து வந்ததின் பலன், இன்று அது தமிழனின் அடையாளமாகவே ஆகிவிட்டது.

வேர்களை காக்கும் கலை இலக்கிய துறைகள் இதுவரை விதையற்ற நாயின் முயத்தல் கனவுகள் போலவே கையாலாகாத படைப்புகளாக வாந்தி எடுத்து வைத்திருக்கிறது. அதிகார துதிபாடிகள், அடிமை படைப்பாளிகள், சனாதான சாம்புகள்- இதில் இன அடையாளத்தை எங்கே தேடுவது. கல்தோன்றி கதைகள் உண்மைதான் போலும், மக்களை விலங்குகளாக மாற்றியதில் அதிகார, ராணுவ ஒடுக்குமுறைகளுக்கு அளப்பரியா வெற்றி.

ஏழு தடைகள் என்பது நம்மினத்தை ஒடுக்கிய சிங்களர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எனலாம். காவலை உடைத்து, மக்களை கொன்று, உறவாடி கொடுத்து, (நடராசனின் நிழலில் பாயும் புல்லுருவிக்கூட்டம் நமக்கு உணர்த்துவது தில்லையின் தற்போதைய பெயர்-நடராசர் ஆடுவது-சிதம்பரம்!!.. புள்ளிகளை இணைக்கவும்).

இந்த வலிகள் அனுதினம் நம் இருத்தலின் சுயமாக மாறிவிட்ட வேளையில், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், கவனிக்கத்தக்க வரலாற்று ஆவணமாக, அடக்குமுறை அரசாங்க சூழலில்- தமிழனின் வீழ்ச்சியை பூடகமாக பதிந்து, நம் துயங்களுக்கான தூரிகையை வீச்சுடன் நிரப்பி, வலிகொள்ளச் செய்திருக்கிறார்.

ஆஸ்கார் புடுங்கிகள், தமிழகத்தை வாழவைக்க வந்த வள்ளல்கள், வருங்கால முதல்வர்கள், கங்கை அகோரிகள் வந்து காப்பற்றும் தமிழ் அபலை என நாறிக்கிடக்கும், ஈழத்துயரத்தை படமெடுக்க தாகமிருக்கிறது, தைரியமில்லை என குழப்பமாய் பேசித்திரியும் அவதாரங்களின் நடுவில், செல்வராகவன் உண்மையிலே ஆண்மகன் தான்.

சோழன், பாண்டியன் என்பது இங்கு குறியீடுகளே. குறியீடுகள் கொண்டு உண்மை பதிக்கப்படும், இங்கு உண்மைகளை கொண்டு குறியீடுகள் மறைமுகமாக உயிர்கொள்கிறது. சிங்கள்-பாண்டிய-கேரள கூட்டணி சோழத்திற்கு எதிராக திரண்டெழுந்த சான்றுகள் சோழவரலாறு முழுக்க வழிகிறது. பாண்டியர்கள் என்பது இங்கு சிங்களர்களுக்கான பதிலீடு. சோழம் என்பது தமிழர்களுக்கான குறியீடு. வில்லும், அம்பும், வீரமும் பீரங்கியின் முன்னே, குண்டுகளின் முன்னே, கருவறுத்தலின் முன்னே, துரோகத்தின் முன்னே, புல்லுருவிகளின் முன்னே என்ன செய்ய முடியும்?

கருணாக்கள் பெண்வடிவில் வந்திருப்பது இரட்டைக்குறியீடு. நீங்கள் கருணாவாய் இருந்து அதிகார துணையுடன் ஒடுக்கி, ஆனந்திக்கலாம் அல்லது சோழ தலைவனாய், உங்கள் மனைவியை நிர்வாணமாய் ஆடவிட்டு, கையறு நிலையில் உயிர்விடலாம். விரிந்த கால்களின் வழியே உயிர்பிரிந்த உங்கள் சகோதரிகளின் நிலைகுத்திய விழிகளின் வலியைச்சுமந்து நடைபிணமாய் வாழ்க்கையை கழிக்கலாம்.

ஆயிரத்தில் ஒருவன் குழம்பி, குழப்பி, திசையற்ற இருளில் பயணித்தாலும், அடிநாதமாய் அதுசுமந்து மடியும் சோகம், நம் இனத்தின் வீழ்ச்சியே. அதை துணிந்து படமாக்கியதற்காக செல்வராகவனுக்கு நமது வணக்கங்கள். உறவாடி குடிகெடுக்கும் உதவாக்கரைகளை, துரோகத்தின் கால்களை, அடக்குமுறையின், பேரினவாதத்தின் கொடுமையை வெளிப்படையாக பதிந்ததற்காக செல்வராகவன், தமிழக படைப்புலகில் என்றென்றும் மதிக்கப்படுவார்.

ஈழத்து வலிகளை, வதைகளை வார்க்கும் முயற்சியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த படைப்பை பல இடங்களில் மாற்றி, வளைத்து நம் இனத்தின் கண்ணீரை வீரமுடன் பதித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். வில்லும், அம்பும், வீரமும், காதலும், பண்பாடும், மொழியும் தோற்கும் - ஒடுக்குமுறையும், துரோகமும் வெற்றிபெரும் என்பதே உண்மை.


ஆயிரத்தில் ஒருவன்- வீழ்ந்தவர்களின் கதை, வாழ்பவர்களுக்கு பாடம். செல்வராகவன் மற்றும் குழுவினருக்கு பெருவணக்கம். இழவு வீட்டில் குறைகண்டு என்ன செய்ய? இது மரணத்தின் ஓலம். இயலாமையின் வலி. இரண்டாம் பாகமெடுத்தால், நாம் வாழ்ந்த கதையை சொல்லுங்கள். யுகாந்திரங்களுக்கான வாழ்வை 30தே ஆண்டுகளில் வாழ்ந்து, எதிர்காலத்திற்கான வித்தாய் மடிந்த கருங்கூட்டம், கரும்புலி, உதிரம் சுரக்கும் முலை என்றும் நம் நினைவுகளில் இருந்து அழியாது. அவர்கள் காட்டிச் சென்ற வழியும் அழியாது.

தமிழகம் தமிழர்களுக்கானதல்ல, போய்வாரும் ஏந்தலே. போய்வாரும் ஏந்தலே. போய்வாரும் ஏந்தலே. போய்வாரும் ஏந்தலே.