புதன், 31 மார்ச், 2010

Big Bang and a Muslim Friend

நேற்று அரைதூக்கத்தில் cab ஏறினேன். பெரும்பாலும் அந்த நேரத்தை தூங்குவதற்கு பயன்படுத்துவதே வழக்கம். தூங்க வசதியாக கண்ணாடியும் அணிந்தாகிவிட்டது. மழை வருவதற்கான முன்னறிவிப்புகள் மெல்ல தலைகாட்ட, வெயில் சற்று அதிகமாகவே தீட்டியது.

பக்கத்திலிருந்த நண்பர், மெதுவாக ஆரம்பித்தார். இந்த Big Bang அப்படின்ன என்ன? மனுசன் தெரிஞ்சுகிட்டு கேக்குறானா தெரியாம கேக்குறானான்னு தெரியல. மேலாண்மை தொழிலில் இது ஒரு தொல்லை. ஆங்கிலம் அருமையாக பேசுவதால் அறிவாளிகள் என முடிவுக்கு வந்து விட முடியாது. அவர் மேலும் ஒரு அடி நீளத்திற்கு தாடி வைத்திருப்பதால் அந்த எண்ணம் இன்னமும் உறுதியாகிவிட்டது. மேலும் இவர்களின் கல்வி பின்புலமும் அறுதியிட்டு கூற இயலாதது.

IT எனில் எல்லோரும் CS /MCA என முடிவு செய்துவிடலாம். ஆனால் டேமேஜர் வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியம் இல்லை. பொட்டுகடலை, புண்ணாக்குவிக்கிறவன் முதல் bsc bcom ba அது இது என பல பின்புலத்திலிருந்து வேலைக்கு வந்திருப்பார்கள். சரி கதைக்கு வருவோம்.

இந்த Big Bang அப்படின்ன என்ன? - சற்று யோசித்து தான் ஆரம்பித்தேன். அவன் எதற்காக இதை கேட்க வருகிறான் என எனக்கு நன்றாகவே தெரிந்தது. எனினும் எந்த விவாதத்திற்குள்ளும் செல்லாமல், அணுக்களின் மோதல், கதிர்வீச்சு, புதிய அணுத்துகள், Big Bang, possible creation of universe, CERN, etcetc என விவரித்தேன்.

இந்த ஆராய்ச்சி வெற்றி பெறுமா என்று கேட்டார். பெறும் அதற்கான ஆயத்தங்கள் சிறப்பாகவே இருக்கிறது, மேலும் pure science'ல் வெற்றி தோல்வி என்று எதுவுமில்லை, ஏனெனில் நீங்கள் எதையும் எதிர்பார்த்து ஒரு சோதனையை செய்வதில்லை என்றேன். அமைதியாகிவிட்டார்.

இன்று மழை பெய்தது காலை. முதல் கோடை மழை பெங்களூருக்கு. இன்றும் cab ஏறினேன். தாடி நண்பர் அமர்ந்திருந்தார். அந்த Big Bang சோதனை வெற்றியா என்றார். ஆம் வெற்றி தான்’ என்றேன் நான். ஆழ்ந்த அமைதியுடன் சில கணம் யோசித்தார் (ஒரு ஞானி ரேஞ்சுக்கு நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்) அப்புறம், உலகம் எப்படி படைக்கபட்டது என்பதை மனிதனால் கண்டுபிடித்து விட முடியாது என தீர்க்கமாக கூறினார்.

தாடிக்காரர்களிடம் விவாதிப்பதில்லை என்பது என் அடிப்படை முடிவு, இருந்தும் அமைதியாக கூறினேன், “இந்த உலகம் கோடான கோடி வருடங்களாக இங்கே இருக்கிறது, ஆனால் அறிவியல மிகவும் இளமையானது, சில நூறு வருடங்களாகத் தான் அடியெடுத்து வைக்க ஆரம்பித்து இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதே மாதிரியான, இன்னும் மோசமான எதிர்ப்புகளை சந்தித்து, மெல்ல மெல்ல தன் முயற்சியில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்றில்லாவிட்டலும் என்றாவது ஒருநாள் மனிதன் அந்த முடிவான கணத்தை அடைவான், It'll take its own time என்று கூறி அமைதியானேன்.

சற்று நேரம் கழித்து, படைத்தவன் மகிழ்ச்சியானதால் தான் இன்று மழை பெய்தது மேலும் படைத்தவன் மகிழும் கணத்தில் பெண் குழந்தைகளை தருவான் என்றார். அந்த ஆளுடன் இவ்வளவு நேரம் பேசியதற்காக ஷீவை கழட்டி அடித்துகொள்ளலாமா என சிந்தித்தேன், மனதில் அடித்தும் கொண்டேன். இப்படி ஒரு வடிகட்டின முட்டாள் தனத்துடன் இவர்களுக்கெல்லாம் எதற்கு big bang குறித்த கவலைகள்? இந்த மடையனுக்கா நான் electron, proton, sub atomic particles என்று விவரித்து அறிவியலை கேவலப்படுத்தினேன் என நொந்துகொண்டேன். இதில் என்னை குத்தி காட்டுவது வேறு, நான் பெண்குழந்தைக்கு ஆசைப்பட்டு ஆண் குழந்தையாகிவிட்டது. அதை குத்திகாட்டுகிறாராம்!!

இவனுங்கள நெனச்சா கண்ணு மூக்கு காது எல்லாமே கட்டுதேடா அய்யா... என்ன ஆளவிடு. இஸ்லாம் என்றால் சிந்திக்கவே கூடாது என்று சொல்லி குடுப்பாங்களோ, இல்ல தாடி வளர்த்தா மட்டும் சிந்திக்க கூடாது என்று பத்வா போட்டுடுவாங்களோ??

செவ்வாய், 30 மார்ச், 2010

கவிதையில்

தினம் ஒரு கவிதை
வாசித்து விடலாம்
அவள் வனப்பில்
எழுதாதார் எவருண்டு
தினம் ஒரு கவிதை
எழுதிவிடலாம் காலத்தில்
நிலைத்துவிடும் பேராவா
எவர்க்குமுண்டு
தினம் ஒரு கவிதையாய்
வாழும் வாழ்வென்ன வாழ்வோ
எவருக்கும் வாய்த்திடாத வரமோ

லாம் லாம் லாம்

மை நிரப்பியாகிவிட்டது
வந்துவிழும் வார்த்தைகளில்
வெளிப்பட்டுவிடலாம் ஒரு
நெம்புகோல் கவிதை
காட்சியும் பாத்திரமும்
கச்சிதம் கணப்பொழுதில்
படைப்புலகம் எனதாகலாம்
இருட்டுதான் மின்னல்
கூர்தீட்டிய முனைசிதைப்பது
ஆதியும் அறிந்திராத
விசித்திர பறவையாக
இருக்கலாம் இறக்கலாம்
உடைகளைந்து இறங்கிவிட்டேன்
இழுத்துச்செல்லும் உந்திச்சுழியின்
இழுப்புக்கெல்லாம் இழுபட்டு
இடைநுழைந்து வெறியாடலாம்
லாம் லாம் லாம்
லாங்கு லகாமின்றி
பொழப்பு ஓட லாம் லாம்
லாம் லாம் லாம்

திங்கள், 29 மார்ச், 2010

உயிர்ப்பு

தேடிவந்து தெரிவிக்கப்படும் அன்பு
ஆர்வமற்று புறக்கணிக்கப்படுகிறது
மழைநேரத்தில் கீழிறங்கும் இலையின்
கவனிப்பாரற்ற பிரிவைப்போல
புதுப்புனலின் செம்பட்டை நீரில்
அடையாளமற்று சகதியில் மக்கும்

மெல்லியவெயில் பிரதிபலித்து
உங்கள் கவனம் பறிக்கும்
பசுந்தளிரின் இளநரம்புகளில்
குதுகலங்கொண்டு பாயும்
உயிர்மையின் அடையாளங்கள்
உங்களுக்கு பரிச்சயமான ஒன்றுதான்
உதிர்வதெல்லாம் உயிர்த்தெழுமென்பதை
நீங்கள் அறிந்திருக்கும்வரை.

உயிர்த்தெழுதலின் சாட்சி நீங்களாகவே
இருக்கப்போவதில்லை எப்பொழுதும்
என்பதை அறிந்திருக்கும்வரையிலும்.

வியாழன், 25 மார்ச், 2010

சேர்ந்து வாழ்வதும், திருமணத்திற்கு முன் உடலுறவும் தனிமனித உரிமை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு :குஷ்புவுக்கு வெற்றி

“அதான் நைட்டெல்லாம் கட்டி வச்சி அடிச்சீங்கில்ல.. போங்கய்யா போயி புள்ளங்கள படிக்கவைங்க.. வந்துட்டாங்க பெருசா கலாச்சாரத்த காப்பாத்த”

உச்சநீதிமன்ற தீர்ப்பு செருப்பெடுத்து விளாசி இருக்கு இந்த கலாச்சார காவல் கும்பல. குஷ்பு சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு சட்டத்தில் இடமுள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழக்கூடாதுன்னு எந்த சட்டம் சொல்லுச்சு?? கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் உடலுறவு வச்சிக்கணும்னு எந்த சட்டம் சொல்லுச்சு?? வாழ்வதும், உடலுறவும் அவரவர் தனிப்பட்ட விருப்பம், அதை பாதுகாப்பது சட்டத்தின் கடமை.

குஷ்புவின் அறிக்கையால் எத்தனை பெண்கள் வீட்டை விட்டு ஓடி இருக்கிறார்கள் அல்லது தவறான வயதில் உடலுறவு கொள்கிறார்கள்?? உங்கள் வீட்டிலிருந்து எந்த பெண்ணாவது வீட்டை விட்டு ஓடி இருக்கிறதா குஷ்புவின் பேட்டிக்கு பிறகு? அப்படி இல்லையெனில் நீங்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டீர்? என வருத்தெடுத்து, குஷ்பு மீதான 21 வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்கிறது.

இந்த செருப்படியுடன் விட்டிருக்க கூடாது, அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும்,தனிப்பட்ட உடமை பாதிப்புகளுக்கும் இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். ஊர் ஊரா சென்று மரங்களை வெட்ட வேண்டியது, போராட்டம் நடத்தி பொதுசொத்த பாழ்பண்ண வேண்டியது, சாதிக்கலவரத்த தூண்ட வேண்டியது, கொலை பண்ணவேண்டியது, மக்கள் பணத்த கொள்ளையடிக்க வேண்டியது இதெல்லாம் குற்றம் இல்ல....

எவன் எவளோட படுத்துட்டுருக்கான்னு வெளக்கு புடிக்குறத்துக்கு மட்டும் ஒரு குரூப்பாத்தான் அலையறானுங்க போல... ஆமா உங்க தொழில் தான் என்ன? அடுத்தவன் எப்ப கோவணத்த அவுக்கறான்னு பாத்துட்டு இருக்கறதா?? அதுதான் உங்க பண்பாடா? காலாவதியான சாரமா?? வேலையத்தவனுங்க.

புதன், 24 மார்ச், 2010

இராமநவமி சுண்டல்

இராமநவமி கர்நாடகாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாநகராட்சி தேர்தல் நேரம் என்பதால், சந்து பொந்தில் இருக்கும் கோயிலில் எல்லாம் Unofficial அன்னதானம் மற்றும் அரசியல் கட்சிகளின் போட்டி சாப்பாடு என ஒரே கொண்டாட்டம் தான். பிஜேபி’யின் ஆஸ்தான நாயகன் ராம் எனவே அவர்களின் வேண்டுதல்களும், அன்னதானமும் களை கட்டியது.

மணிக்கொரு கும்பல் வீட்டு கதவை தட்டி ஓட்டு கேட்டு, எங்களின் பெயர் பட்டியலில் இல்லை என்பதில் மிகவும் கவலையுற்று, சோகத்துடன் திரும்பியது. தரைத்தள வீட்டில் இருந்தால் இந்த இனிய தொல்லைகள் அனுதினக்காட்சிகள். (சீக்கிரம் பெயர்பட்டியலில் இணைக்க வேண்டும்: தேர்தல் சமயத்தில் 1000-2000 தேறும் :) )

சரி ராம் கதைக்கு வருவோம். Corporate Disucssion / Lunch Talks ஒரு அபாயகரமான ஏரியா. எதை தொடுவது எதை விடுவது என யோசித்து யோசித்து பேச வேண்டி இருக்கும். தின்ன உக்காரும் கூட்டத்தை பொறுத்தும் அதுமாறுபடும். முஸ்லீம் பசங்கள் வச்சிகிட்டு பாகிஸ்தான், தீவிரவாதம் என்று பேசுவது கஷ்டம். நம்மள் வச்சிகிட்டு காவிரிய பத்தி பேச பெங்களூர் பசங்களுக்கு கஷ்டம். கல்யாணமாகியிருந்தா பிகர் குறித்து பேசுறது இன்னமும் தொல்லை. இதில் போன வாரம் ஒரு சுவாரஸ்யமான விவாதம் நடந்தது.

14 வருசம் காட்டுல சுத்துன ஜோடிக்கு ஏன் குழந்தை இல்ல? இராவணன் கிட்ட இருந்து வந்த பின்னாடி தான லவ குசா ராமாயணத்துல எண்ட்ரி, அதனால அது இராவணனோட குழந்தங்க அப்படின்னு ஒரு தரப்பு எடுத்து விட... உள்ள நுழையலாம வேணாவான்னு எனக்கு ஒரே குழப்பம்.

அதுவும் சரிதான். எல்லாம் தெரிந்த ராமனுக்கு அது தன்னோட குழந்தைங்க என்பது தெரியாதா?? அப்படி இல்லாத பட்சத்தில் தானே மனைவி மீது சந்தேகம் மற்றும் அவளை காட்டுக்கு துரத்தல்?? கடவுள் மனித அவதாரத்தில் இருந்தாலும், அடிப்படை நாள் கணக்கு கூடவா தெரியாது, அது தன் குழந்தையா இல்லையா என அறீய?? எழவெடுத்தவன் அந்த கணக்கு கூட தெரியாம என்னத்தடா ஆட்சி செஞ்சிருப்பான்?

அடுத்த கேங்: இல்லடா... அந்த ஆளபாத்தாலே ஒரு மாதிரியா இருக்கான்.. இதுல ஒரு தம்பி கூட ஓவர் கனெக்சன்... ஒருவேள அவனா நீயீ மாதிரி இருக்குமோ... அதனால தான் 14 வருஷம் பிள்ளை இல்லையோ?? - எனக்கு இது கொஞ்சம் அதிகமாகவே பட்டது. திருநங்கைகளையே அரவணைக்கும் மனப்பக்குவத்தில் இந்த முன்னெடுப்பு சரியான திசையில் செல்வதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நண்பர் விடாமல் - அந்த ஆள் அந்த மாதிரி கேசுன்னா எதுக்கு சும்மா ஒரு புள்ள வாழ்க்கையா பாழாக்கனும், அப்புறம் அவள காட்டுக்கு அனுப்பனும், இதுல சாமி காமின்னு யோக்கியத வேற எதுக்கு?? தம்பி கூடவே சந்தோசமா இருந்த்து தொலைக்க வேண்டியதுதான...

பெங்களூரில் நிலவும் multiculture, multi dimensional thought process’ல் அலசப்படாத கருத்துக்களே இல்லை எனலாம். அதில் ராமனின் டிரவுசரும் கழட்டப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது எந்த வலையிலும் பெண்மையை இழிவுபடுத்தும் பதிவல்ல. சீதா என்ற பெண் உண்மையே என்றால் அந்த பெண் சிந்தியா கண்ணீரே, இன்றளவும் ராமன் என்ற பாத்திரத்திற்கு கிடைக்கும் அனைத்து அவமரியாதைக்கும் அடிப்படை என்றே நினைக்கிறேன்.


திங்கள், 22 மார்ச், 2010

Blogs:மைய்யம் கரைந்த இலக்கியம் (Decentralized Literature)

இலக்கியம் அதற்கான குறியீடுகளை, படைப்பாளியின் பார்வை மற்றும் அனுபவங்களின் வழியே தன்னை சமைக்கிறது. இலக்கியம் தன்னைத் தானே நிகழ்த்திக்கொள்ளும் ஒரு களமாக படைப்பாளி உதவுகிறான். அந்த களத்தின் பண்புகள், விருப்பு வெறுப்பு, தீர்ப்பு, அறியாமை அனைத்தும் இலக்கியத்தின் கூறுகளாகி வாசிப்பவனின் எண்ணஓட்டத்திற்கேற்ப தன் பாதிப்பை நிகழ்த்திச்செல்கிறது. உணரப்படும் இலக்கியம், எடுத்தாளப்பட்டு, வடிவமாய் சமைவதில் படைப்பாளியே அதன் முதல் பார்வையாளனுமாகிறான்.

படைப்பாளியின் ego படைப்பின் வழி தெளிவாக அல்லது திட்டமிட்டு இறக்கிவைக்கப்பட்டு, இலக்கிய புனிதபிம்பங்கள் அரசியற்தந்திரத்திடனும் பிரச்சார சுற்றுக்கு விடப்படுகிறது. இலக்கிய ஆளுமை மற்றும் அவ்வாளுமையின் படைப்பு இரண்டும் மெல்ல மெல்ல தனக்கான மைய்யத்தை நிறுவிவிடுகிறது. பிம்பக் கட்டுடைப்புகள், அந்த மைய்யத்தை குறிவைத்தே தன் ஆயுதங்களை எறிகிறது.

Critics shatter the axis-the ego. படைப்பின் egoவை தூளாக்குவதன் மூலம் படைப்பாளியை நிர்மூலமாக்குகிறது எதிர் வாதங்கள். எப்பொழுதும் இவை சாத்தியமாகிவிடுவதில்லை. எதிர்ப்புகளை சீரணித்து, அல்லது அதையே தன் egoவை வளர்க்கும் செறிவூட்டப்பட்ட உணவாக மாற்றி மேலும் மேலும் படைப்பாளுமை தன் மைய்யத்தை, அதன் அடர்த்தியை அதிகரிப்பதும் நிகழ்கிறது. படைப்பும், ஆளுமையும், பின் தொடர்பவர்களும் அந்த மைய்யத்தை நிறுவிட்ட போதையிலையே இறுமாப்படைகின்றனர். இதுநாள் வரை இதுவே இலக்கிய பெருமையின், படைப்பாளுமையின் பரிசாக இருந்து வந்திருக்கிறது.

ஆனால், பதிவுலகின் வருகைக்குபின், இலக்கியவெளிப்பாட்டிற்கான தளம் வேறாகிவிட்டது. இது மைய்யம் கரைந்த படைப்புவெளி. Decentralized Platform. ஒரு மாயச்சூழல் அல்லது வெவ்வெறு ஆரங்களில் சுழலும் முடிவற்ற சுருள்பாதை. இதோ, அதோ என்று எந்த படைப்பாளுமையின் நிழலிலும் ஓய்வெடுத்து, போற்றி புகழ்ந்து, மைய்யத்தின் அடர்த்தியில் பிரச்சார துண்டு சீட்டுகளை விற்பனைக்கு விடுவது இயலாத ஒரு செயலாகிவிடுகிறது. வெவ்வெறு இசம் அல்லது பரிமாணம் என்ற அளவில் திரிந்து நின்ற இலக்கியம் இன்று தளவேறுபாட்டின் சூழலில், தன் ஆளுமையை முழுமையாக நிர்மாணிக்க, அல்லது குவித்து வைக்க இயலாததாய் துணுக்குற்றுக்கிடக்கிறது.

பிரதான ஆளுமை என மார்தட்டிய மைய்யங்கள், நாளொன்றாய் கிளம்பும் வெவ்வெறு படைபாளுமைகளின் நெருக்குதலில் மிகவும் நிர்வாணமாய் பாதுகாப்பின்றி உணர்கின்றது. தன் சார்பு தளங்களை அல்லது தத்துவ தேடல்களை முன்வைப்பதில் பெரும் பின்னடைவை சந்திக்கிறது. ஏனெனில் அனைத்து சார்பு தளங்கள், தத்துவங்கள் ஏதாவது ஒரு புள்ளியில் தோலுரிக்கப்பட்டு பரிகசிக்கபப்டுகிறது, ஆளுமையின் மைய்ய அடர்த்தி மறுபடி தாக்குதலுக்குள்ளாகி, புறமுதுகிட்ட பேரரசன் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.

தகவல், அனுபவம், தேடல், சார்பு, தத்துவம், மொழி, கதை, படைப்பு, படைப்பாளி, பார்வையாளன் என அனைவரும் இயங்குதள நிலையாமையின் வெப்பத்தை உணரத்துவங்கிவிட்டனர். புதுமைப்பித்தனோ, குபரா’வொ, கரிச்சான்குஞ்சோ, நாபி’யோ இறூமாந்து திரிந்த படைப்பு தளங்களும், கால அளவுகளு இனி வரும் படைப்பாளுமைகளுக்கு எட்டாக்கனியே. பதிவுலம் அந்த மைய்யமற்ற வெளியின் நீள அகலங்களை நாளுக்கு நாள் புரட்டிப்போட்டபடியே தன்னையும் சுய அழிவிற்கு உட்படுத்துகிறது.

Decentralized இலக்கியம், முகமற்ற படைப்பாளுமைகளின் மைய்யமற்ற தளங்களில் உருக்கொண்டு, முழுக்க முழுக்க இலக்கியம் இலக்கியத்திற்கான, நினைவின் அடுக்குகளில் தெளிவற்ற அனுபவங்களை அடுக்கிச்செல்லும் நிகழ்வாகவே அமையும். புனிதபிம்பங்கள், நெம்புகோல் படைப்புகள், தீவிர ஆளுமை, தவிர்க்க முடியா ஆளுமைகள் என்ற முத்திரைகள் விற்கப்படும் கடைகள் மூட்டையை கட்டவேண்டியதும் காலத்தின் நியதியாகிவிடும் - விட்டது.

இந்தச்சூழலில் தீவிர மனோபாவத்துடன் அல்லது ஆழ்ந்து அனுபவித்து முன்வைக்கப்படும் படைப்புகள் விரல்விட்டு என்னக்கூடியவையாக அல்லது எண்ணிறைந்தவையாக இருக்க வாய்ப்புள்ளது. A Polarized creative world. போலச்செய்தல் அல்லது பாவித்தல் வெகுவிரைவாக -நொடிகளில் நிகழ்வாய்ப்பிருப்பதால், எங்கும் ஒரே மாதிரியான அனுபவங்களை அல்லது முடிவான படைப்புகளை கண்ணுறும் கடுப்பான ஒரு நிலைக்கு வாசகர்களை தள்ளுவதும் Decentralized Literature'ன் பண்பாக இருக்கும்.

ஆளுமைகளின் Underwearகளை துவைத்து காயப்போட ஆயிரக்கணக்கில் வலைப்பக்கங்கள் இருக்கும். சுனாவுடன் ஜி-சாட்டில் கதைத்த பொழுதொன்றில் முதல், எனது முதல் மின்னஞ்சல் வரை ஆளுமைகளின் அன்றாட வாழ்க்கை பகிரப்படுவதில், நீங்களும் ஒரு வாசகன் - நீங்களும் ஒரு ஆளுமை - நீங்களும் ஓரிடத்தில தூற்றப்பட்டு மற்றொரு பக்கத்தில் புகழப்பட்டு - ஒரு சில ஆளுமைகளே குப்பை கொட்டி, குசுவிட்டுத் திரிந்த படைப்புவெளி இனி அனைத்து வலைஞர்களுக்கும் கிட்டும். இந்த நொடியில் இந்தப் பதிவை கிழித்து தோரணம் கட்ட முடிவெடித்துக்கொண்டிருக்கும் உங்கள் குரூரபுன்னகைக்கு ஒரு வணக்கம். Bro, Welcome to the Blog literature - The Decentralized Zone!

புதன், 3 மார்ச், 2010

ஆதியில் வீடியோக்கள் இல்லை (அ) என்ன கொடும நித்தியானந்தம் இது??!!

சாமிகளின் காமலீலை குறித்து எழுதப்புகுந்தால் என் டிரவுசர் நனைந்துவிடும் எனவே அதை தி.க. வெளியீடுகளை படித்து அறிந்து கொள்ளுங்கள். உலக மதங்களிலே அதிகபட்ச Porno Contentஜ உள்ளடக்கியது பொந்து மதம் தான். தொட்டதுக்கெல்லாம் தூக்கிட்டு நிக்குற சனங்க அதை அனுபவித்து அனுபவித்து எழுதி, சிலையில் வடித்து, காமசூத்திரம், கொக்கோகம் என இன்னிய வரைக்கும் non stop innings நடந்து கொண்டிருக்கும் நாட்டில் ஒரு தனி மனிதன் தன் உடல் தேவையை தனித்துக்கொள்வது எவ்விதம் தவறு?? இந்திரன் செய்யாததா?? கிருஷ்ணன் செய்யாததா? ரதி-மன்மதன் என தனி இலாகாவே இருக்கிறதே சாமி... நித்தியானந்தா மட்டும் என்ன செய்யமுடியும்??

ஆதிகாலத்தில் விடியோ கேமராக்கள் இல்லை. இல்லையென்றால் இன்று சாமியார்கள் என்ற கான்செப்டே இருந்திருக்காது என நினைக்கிறேன்.. கோயிலில் கோவனத்தை அவுத்த சாமியாரை ஒப்பிட்டால் நித்தியானந்தம் எவ்வளவோ பரவால்ல!

(தேவநாதன்: நம்ம ரேஞ்சிக்கு ரஞ்சிதா செட்டாகுமா... ஏதோ கோயிலுக்கு வந்து போற ஆண்டிகள மட்டும் தான் மடக்க முடிஞ்சது! நித்தி... கோயில் தான் safe.. இங்க வீடியோ கேமரால்லாம் இருக்கது.. என்ன பொழக்க தெரியாத புள்ளயா இருக்க போ!!! சொல்லிருந்தா காஞ்சிபுர குறுக்கு சந்து கோயில்ல ஒன்ன செட்பண்ணி தந்திருப்பேனே...தம்பி நாம பூணூல் கேட்டகிரி... அதனால damage அவ்வளவாக இருக்காது..)

(காஞ்சி சங்கரா...: அந்த பிகர் நமக்கு மடங்காம போச்சே :( ... இளைய மடத்துகிட்ட சொல்லி profile update பண்ண சொல்லனும்... ஒன்னும் பண்ண முடியலன்னாலும் பாத்தவது பசிதீத்துக்கலாம்மோன்னோ)

இந்திய அல்லது தமிழ் hypocrisy என்பது இதுதான்... நீங்க மட்டும் குஜாலா இருக்கலாம்.. உங்க கஷ்டம் கவல துன்பத்த போக்குற சாமியார்க்ள் மட்டும் எல்லாத்தையும் கையில் புடிச்சிக்கிட்டு அமைதியா இருக்கனும்??? என்ன கொடும நித்தியானந்தம் இது?? அவன் அப்படியே control பண்ணிட்டாலும் NightFall இருக்குமேடா.. அதுக்கு என்ன பண்ண போறீங்க?? அவனுக்கு வரக்கூடாதுங்குறது உங்க பிரச்சனையா அல்லது ஒரு நடிகையை அ பெண்னை கூடிவரக்கூடாதுங்கறது உங்க பிரச்சனையா?? அவன் rest room'ல் தன்கையே தனக்கு உதவி என ஒக்காந்துட்டா உங்களுக்கு எதும் பிரச்சனை இல்லையா??

மதம் தனிமனித உரிமை என்றால் காமமும் தனிமனித உரிமை தான். வியாபாரமாகவில்லை: மோசடி இல்லை: ர நடிகை நித்தி மீது காதலாய் கசிந்துருகி கண்ணீர் மல்கி இருக்கலாம்... அதுவும் அவர் தனிப்பட்ட உரிமையே. என்னவோ இவனுங்க உசுரே போறமாதிரில்லா சீன போடுறாங்க எல்லாம்??

நித்தியானந்தம் ஒரு போலி! சாமி-சாமியார் என்பதே ஒரு போலிதான். போலச்செய்தல் தான் கடவுள் என்ற concept. இதில் என்ன உண்மையை எதிர்பார்க்கிறார்கள்?? அவன் வசூல் செஞ்ச பணத்துக்கு உங்களுக்கு எதும் நல்லது நடக்கலன்னா அதுக்கு நீங்கள் கேள்வி கேக்கலாம்.. அது பிசினஸ் தர்மம். அவன் கோவணத்த அவுத்ததுக்கெல்லாம் இப்படி கொடிபிடிக்கிறீங்களேடா... உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா??

கேரளா தண்ணி தரல, அரசியல் வாதி 1000 கோடியா ஏப்பம் விட்டுகிட்டு இருக்கான், bt brinjal உள்ள வர பேரம் நடக்குது, ஓட்டுக்கு 1000 ரூபா வாங்கிட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்க்க வேண்டியது.. எவனாவது ஏமாந்தவன் தன் இயற்கை தேடலை எறக்கி வைக்க பார்த்த போராட்டம், கொடி, கண்டனம் - சீ பொழப்பத்த பசங்களா..