புதன், 2 டிசம்பர், 2009

தேவநாதனின் பிந கட்டுடைத்தல் அல்லது அம்பி தேவநாதான் வாழ்க!

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்! பொந்து மதம் முழுக்க சாமிகளும், கோயில்களும் கூத்தாடி மடங்களென செயல்பட்டு, கல்லுக்கு தாலி கட்டி, அதற்கு கல்யாணம் செய்து வைத்து, பிள்ளைகளும் பெற வைத்து அதற்கும் 2 பொண்டாட்டி, ஊரெல்லாம் வைப்பாட்டி என கதைகள் சொல்லி... உடலெல்லாம் பெண்குறி முதல், அடுத்தவன் பொண்டாட்டியை ஏமாற்றி கெடுப்பது வரை.. பொந்து மதம் நிஜமாகவே பொந்து மதம் தான். எந்த பொந்து என்ற அதிபுத்திசாலித்தன கேள்வியெல்லாம் கேட்டால் நான் தேவநாதனிடம் refer செய்யவேண்டி இருக்கும். :) :)


ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையாய் தேவநாதன் மாமிகளை கரெக்ட் செய்ய, சங்கராச்சாரியாரெல்லாம் இளமை புதுமை பிகர்களையே மடக்கி போட்டவர். பின்நவீனத்துவ கட்டுடைத்தலின் முழு பிம்பமாய் திகழும் தேவநாதன் முதலானவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கடவுள் என்பதெல்லாம் கல், மற்றும் கல்லா கட்டுதல் என்பதை முற்றும் முடிவாக உணர்ந்தவர். From Sex to Super consciousness என கதை விட்ட ஓஷோவையெல்லாம் ஓரங்கட்டிய அரைக்குடுமி. :)

பொட்டு கட்டி தேவதாசிகளுடன் கருவறை கல்யாணமண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என ஓடிப்பிடித்து விளையாடிய ஆரோக்கியமான சமூக பிண்ணனியில் இருந்து வரும் தேவநாதனின் சிந்தையில் இழந்த பெருமைகளை மீட்கும் வரலாற்று கடமை மலையென முன்நின்றிருக்கிறது. கல்யாணம் ஆகி மனிவியும் பிள்ளையுமாய் இருக்கும் கடவுள்கள் இரவில் என்ன செய்வார்கள்?! என்ற மில்லியன் டாலர் கேள்வியும் தேவநாதனுக்கு எழுந்திருக்கலாம். :)

ரமேஷ்:பிரேமின் மொழிவிளையாட்டில் சொல்வெதென்றால்... அதீத இருட்டில் அடைபட்டிருக்கும் தெய்வபிம்பங்கள் ஆடையினை தொலைத்து சூழலை ஓளிபெறச்செய்தது. கற்கள் மோதிக்கொள்ளும் ஒலி இருட்டை கிழித்து அண்டவெளியின் ஆத்ம தாகத்தை தணித்தது. :)

கோயில் என்றால் வழிபாடு என்ற இடைச்செருகலை கட்டுடைத்து, கருவறை, பள்ளிஅறை என்பதன் அடிநாதமான விளக்கத்தை மக்களுக்கு “படம்” பிடித்து காட்டிய புரட்சியாளர் தேவநாதன் போன்ற சமுதாய முன்னேடிகளே பெரியருக்கு பின்பான சுயமரியாதை தமிழகத்தின் தேவை. :) பெரியாரும் செய்திருக்க முடியா புரட்சி இது, ஆனால் வரலாற்றின் பக்கங்களில் மிக கேவலமாக பதிய வேண்டி இருப்பது, தேவநாதன் போன்றோர் முன்னெடுக்கும் புரட்சியினை அழிக்க நினைக்கும் ஆத்திக அறைகுறைகளின் திட்டமிட்ட சதி என்றே நினைக்கிறேன். :)

திரட்டப்பட்ட கூலிப்படை துடைப்பம், முறம் மற்றும் முட்டை எறிகையில் மனதிற்குள் வடை போச்சே என்ற Nancy Friday Women on Top Fantazy கனவுகள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறாதா இல்லையா என்பதை பிராய்டின் தீவிர மாணவர்கள் யாராகிலும் இருந்தால், அவர்களுக்கென விட்டு வைக்கிறேன். காதல் புனிதமானது, காமம் புனிதமானது, புதிரா/புனிதமா, கணவன் தேவன் மனைவி தேவி.. என்பதெல்லாம் மிகச்சரியான நடைமுறைபடுத்தலுக்கு உட்படுத்தப்படுகையில், அதற்கான களம் “புனிதம்” என கட்டமைக்கப்பட்ட கோயில் தான் சரியான இடம் எனபதை உள்ளங்கை நெல்லிக்கனி என அறிந்தரதவரா தேவநாதன்?? :)

கட்டுடைத்தலுக்கு ஆள் சேர்க்கும் பிநா சங்கம் ஏற்கனவே தேவநாதனை அதன் தலைவராக ஏற்றுக்கொண்டதான நிலாமுற்ற கூட்டமொன்றில் குஜிலி, குஜாலிகளுக்கு மத்தியில் அறிவித்தாகிவிட்டது. அடுத்த திட்டமாக, மேலும் பல தேவநாதன்களை உருவாக்கும் ...த்துபட்டறை ஒன்றையும் உருவாக்குமாறு பீடங்கள், மடங்கள், முடங்கள், குடங்கள் அனைத்திற்கும் அவர்கள் ஏற்கனவே விரிவான குறிப்பு ஒன்றை பௌர்ணமி மேகங்களுக்குள் தொலையும் இரவொன்றில் அனுப்பிவைத்தற்கான பிரதியை தேவநாதனின் சிறைச்சாலை சுவர்களின் செங்கற்களில் படிமச்செய்தியாய் அனுப்பிவைத்திருக்கின்றனர்.

கடைசியாக எதிர்கட்சியினருக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்... முடிந்தால் இந்த தேர்தலில் தேவநாதனை தோற்கடித்து பாருங்கள்... அவரின் குடுமியை அசைக்கமுடியாது என்பதை அவருடன் கருவறையை பகிர்ந்துகொண்ட 15பெண்களின் மீது சத்தியமாக சொல்க்கொண்டு என் உரையை முடித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.

அம்பி தேவநாதன்.... வாழ்க உங்கள் ஓட்டு தேவநாதனுக்கே... அம்பி தேவநாதன் வாள்ள்ள்ள்ள்க...





3 கருத்துகள்:

ராஜ சேகர் சொன்னது…

கெடைச்ச வாய்ப்ப பயன் படுத்திட்டு மொத்த கோவத்தையும் மறுபடி கொட்டிடீயே நட்பு.. உன் கருத்தும் எழுத்தும் அருமை நட்பு..

மீன்துள்ளியான் சொன்னது…

:))

பார்வைகள் சொன்னது…

புரட்சியாளன் தேவநாதன் என்பது அருமையான சொல்லாடல். கோவில் குறித்த மறுசிந்தனையை தேவநாதன் ஏற்படுத்தியிருகிறார் என்றால் மிகையில்லை. நல்ல பார்வையோடு கட்டுரை அமைந்துள்ளது. வாழ்த்துகள்.

கருத்துரையிடுக