வெள்ளி, 7 மே, 2010

இதுவுமது

இன்றுதான் தலையுயர்த்தி பார்த்தேன்
நின்று சிறிது பேசவும் செய்தேன்
தீண்டியபடி சிறிதூரம் நடக்கையில்
மென்மையின் குறுகுறுப்பு
ஒவ்வொரு தீண்டலும்
வேறாகவும் ஒன்றாகவும்
பதில்கள் அற்ற அமைதியில்
வேர்விடும் சுயத்தில்
உயிர்ப்பின் வாசம்

எலியைத் தடவும்
எழவெடுத்த வாழ்க்கையில்
நேரம்கிடைக்கையிலே
கேட்டுவைக்கலாம்
இவ்வளவு நெருக்கமாக
வளரும் வாழ்வில்
என்றேனும் அடித்துக்கொண்டதுண்டா
தோட்டத்து புற்கள்?

2 கருத்துகள்:

M.Rishan Shareef சொன்னது…

:-)

//சிறிதூரம்//

சிறிது தூரம்?

Unknown சொன்னது…

சிறிது தூரம் தான்.

கருத்துரையிடுக