புதன், 28 ஏப்ரல், 2010

புறக்கணிப்பின் நெடுந்துயரம்

கடந்து கொண்டிருப்பதின்
நினைப்பற்று
கடந்து கொண்டே
காலம்
கால்மாற்றி கால்மாற்றி
பின்னும் வலைகளில்
இரையாகி விரிகிறது
நினைவுப்பெருவெளி

ஏதோ ஒரு இழையை
குருதி கொப்புளிக்க
அறுத்துச் சென்றது
கருவேலமுள்ளின்
கூர்நுனியொத்த
புறக்கணிப்பின்
நெடுந்துயரம்

இலக்கற்று வெறிக்கும்
தண்டவாளப் பார்வைகளில்
மரணித்த கனவுகளின்
இறுதிப்பயணம்.

2 கருத்துகள்:

ரசிகன்! சொன்னது…

Attakaasamaana finishing...

romba nallaa irukku isai !!!

Trails of a Traveler சொன்னது…

Good one..

கருத்துரையிடுக