புதன், 25 ஆகஸ்ட், 2010

மழைநேரப் பெருங்காதல்

நீ ஈரம்துவட்டும்
மழையின் நிறம்கொண்டது
மோகம்

உன் புருவம்வழியும்
துளியின் சுவைகொண்டது
தாகம்

உன் இமைகள்மறைக்கும்
வெளியின் ஒளிபூசியது
காமம்

நீர் முத்துவிளையும்
கார்கூந்தல் கடல்மூழ்க
காதல் சுவாசிக்கிறேன்

காதலின் பெருமழைக்காலம்
நீ
நீ
மழைநேரப் பெருங்காதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக