திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நீர் வளையம்

நீர்ப்பிரி அலையும் வெளி
கிழித்து குடைவிரிக்கிறாய்
நீமிதித்ததில் தரையெங்கும்
நீர்வளையம்
நீர்நீராய்
வ்ளைவளையாய்

சுவர்தொட்டு திரும்பி
உனைகாணாமல்
வான்நோக்கி வெறித்திருந்தன
நீர்வளையாய்
நீண்டவழி

கரைந்த மேகம்
விரைந்து வழியும்
உன்குடை நுனிகளில்
மழைக்கண்ணீர்
தீண்டாமை ஒரு
மழைத்தன்மையற்ற
செயல்

நீர்வளையம் துளைத்த
மழைக்கண்ணீர் சபித்தது
வெளியெங்கும் கருமழை
பிரளயம் இடிமின்னல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக