வியாழன், 9 செப்டம்பர், 2010

பனிமுத்தம்

இரவின் பகல்
மெழுகாய் உருகும்
முழுநிலாப் பொழுதில்
தேவதைகள் தவறவிட்ட
வெண்முத்தின் ஒளிச்சிதறல்
எனக்கான உன்மோகநகைப்பில்

நதிக்கரை நாணல்
தீண்டிமீளும் வாடைக்காற்றின்
வாசம்கொண்டவள் நீ
உனக்காய் கரையும்
என்பொழுதுகளை நிறைப்பது
அலைநுரையின் மென்மைபழகும்
அதரங்களின் வண்ணம்


டிசம்பர்மாதப் பூவில்தேங்கிய
தேனின் சுவைகொண்டதுன்
முத்தமென்றேன் இல்லையென
இடம்வலமாய் அசைந்தகுழலால்
கார்காலத் துளிதானென்றேன்
சட்டென நீநிகழ்த்திய முத்தத்தில்
பட்டென விளங்கியது
முன்பனிக்காலத்தின்
மென்பனியாலனது
உன்முத்தச்சுவை

2 கருத்துகள்:

குட்டிப்பையா|Kutipaiya சொன்னது…

//முன்பனிக்காலத்தின்
மென்பனியாலனது
உன்முத்தச்சுவை//

மிக அருமை..

Unknown சொன்னது…

நன்றி தோழி. :)

கருத்துரையிடுக