வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மழைமோகம்

நீ புன்னகைத்த நொடி
மலர்ந்த பூக்கள்
உதிர்வதேயில்லை
சிலிர்த்து நகைத்தது
தோட்டத்து பூச்செடி
வானம் பார்த்தேன்
கொத்துக் கொத்தாய்
மினுமினுத்தன
நம்முத்தங்கள்

நுதல் தீண்டி
இதழ்நனைத்து
மலைஇழிந்து
இடைபரவி
உனைஅடையும்
இம்மழை
மோகத்தாலானது

கனவில் அணைத்ததாய்
சொல்லிச்சொல்லி
வெட்கப்பட்டாய்
அதன்பின் நடந்ததை
சொல்லவே முடியாமல்
வெட்கம் கசிந்தேன்

4 கருத்துகள்:

VELU.G சொன்னது…

காதலில் கசிஞ்சிருக்கீங்க வாழ்த்துக்கள்

நல்லாயிருக்குங்க

Unknown சொன்னது…

கசியலன்னா அது காதலே இல்ல நண்பா.. :)

குட்டிப்பையா|Kutipaiya சொன்னது…

//கொத்துக் கொத்தாய்
மினுமினுத்தன
நம்முத்தங்கள்//

அருமை..

Unknown சொன்னது…

குட்டிபையா... ரசித்ததற்கு நன்றி.

கருத்துரையிடுக