செவ்வாய், 14 ஜூலை, 2009

எயில் நாடு

நுளம்ப பாடி என இராசராசனின் மெய்கீர்த்தியில் குறிக்கப்படும் கிருட்டிணகிரி, எயில் நாடு எனவும் வழங்கப்பட்டிருக்கிறது. எயில் கொப்பம் - ராஜராஜேந்திரன் மெய்கீர்த்தி.

மலைகள். காணுமிடமெல்லாம் மலைகள். கொல்லிமலையில் ஆரம்பித்து தருமபுரி கிருட்டிணகிரி-ஒசூர் வரை மலையும் மலை சார்ந்த இடமும் என குறிஞ்சி திணைக்குரிய நிலப்பரப்பு, எயில் நாடு என்று வழங்கப்படுகிறது இடைக்காலத்தில். சமீபத்திய ஆய்வுகள் கற்காலந் தொட்டு ம்னிதர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான் சான்றுகளை கண்டுபிடித்துள்ளன. குகை ஓவியங்கள் அதிகமாக கிடைக்கும் ஒரு மாவட்டம் கிருட்டிணகிரி.

விடுகாதழகிய நாடு எனவும் இப்பகுதி குறிக்கப்பட்டிருக்கிறது. சவ்வாது மலை ஏலகிரி மற்றும் அள்ளி தெளித்தது போல் எங்கும் குறுமலைகளாக காட்சியளிக்கும் இந்நிலப்பரப்பு, நான் பார்த்து, வியந்து, துய்த்து வளர்ந்த பகுதி. நடந்தாய் வாழி காவிரி என இளங்கோ பாடிய பொன்னி தமிழ்நாட்டில் முதலடி வைக்கும் எயில்தேசம். அவளின் தங்கை தென்பெண்ணையும் பாய்ந்து வளம்நிறைக்கும் சீரிளமை நாடு.

அந்த பின்புலத்தில் இந்த வலைபதிவிற்கு எயில்நாடு எனப்பெயரிட்டுள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக