வியாழன், 25 மார்ச், 2010

சேர்ந்து வாழ்வதும், திருமணத்திற்கு முன் உடலுறவும் தனிமனித உரிமை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு :குஷ்புவுக்கு வெற்றி

“அதான் நைட்டெல்லாம் கட்டி வச்சி அடிச்சீங்கில்ல.. போங்கய்யா போயி புள்ளங்கள படிக்கவைங்க.. வந்துட்டாங்க பெருசா கலாச்சாரத்த காப்பாத்த”

உச்சநீதிமன்ற தீர்ப்பு செருப்பெடுத்து விளாசி இருக்கு இந்த கலாச்சார காவல் கும்பல. குஷ்பு சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு சட்டத்தில் இடமுள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழக்கூடாதுன்னு எந்த சட்டம் சொல்லுச்சு?? கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் உடலுறவு வச்சிக்கணும்னு எந்த சட்டம் சொல்லுச்சு?? வாழ்வதும், உடலுறவும் அவரவர் தனிப்பட்ட விருப்பம், அதை பாதுகாப்பது சட்டத்தின் கடமை.

குஷ்புவின் அறிக்கையால் எத்தனை பெண்கள் வீட்டை விட்டு ஓடி இருக்கிறார்கள் அல்லது தவறான வயதில் உடலுறவு கொள்கிறார்கள்?? உங்கள் வீட்டிலிருந்து எந்த பெண்ணாவது வீட்டை விட்டு ஓடி இருக்கிறதா குஷ்புவின் பேட்டிக்கு பிறகு? அப்படி இல்லையெனில் நீங்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டீர்? என வருத்தெடுத்து, குஷ்பு மீதான 21 வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்கிறது.

இந்த செருப்படியுடன் விட்டிருக்க கூடாது, அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும்,தனிப்பட்ட உடமை பாதிப்புகளுக்கும் இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். ஊர் ஊரா சென்று மரங்களை வெட்ட வேண்டியது, போராட்டம் நடத்தி பொதுசொத்த பாழ்பண்ண வேண்டியது, சாதிக்கலவரத்த தூண்ட வேண்டியது, கொலை பண்ணவேண்டியது, மக்கள் பணத்த கொள்ளையடிக்க வேண்டியது இதெல்லாம் குற்றம் இல்ல....

எவன் எவளோட படுத்துட்டுருக்கான்னு வெளக்கு புடிக்குறத்துக்கு மட்டும் ஒரு குரூப்பாத்தான் அலையறானுங்க போல... ஆமா உங்க தொழில் தான் என்ன? அடுத்தவன் எப்ப கோவணத்த அவுக்கறான்னு பாத்துட்டு இருக்கறதா?? அதுதான் உங்க பண்பாடா? காலாவதியான சாரமா?? வேலையத்தவனுங்க.

3 கருத்துகள்:

vaaalpaiyan சொன்னது…

he he.. nalla narukkunu keteenga..

one famous quote, may be little funny but it is 99% true,

Virginity is not Dignity, but its just lack of opportunity..

naama miss pannitome nu vaiyatherichal la irukira kootam adhelam, just oru theerpula thirutha mudiyaadhu..

Unknown சொன்னது…

இதுங்கள்ளாம் மிஸ் பண்ணுற ஆளுங்களா? பத்து வயசுலயே பத்து ரேப் பண்ணி அரசியல்ல நுழைஞ்ச அக்கியூஸ்டுங்க.. நீங்க வேற இவனுங்களுக்காக பரிதாப்பபடுகிட்டு :)

Trails of a Traveler சொன்னது…

Well said!

கருத்துரையிடுக