புதன், 31 மார்ச், 2010

Big Bang and a Muslim Friend

நேற்று அரைதூக்கத்தில் cab ஏறினேன். பெரும்பாலும் அந்த நேரத்தை தூங்குவதற்கு பயன்படுத்துவதே வழக்கம். தூங்க வசதியாக கண்ணாடியும் அணிந்தாகிவிட்டது. மழை வருவதற்கான முன்னறிவிப்புகள் மெல்ல தலைகாட்ட, வெயில் சற்று அதிகமாகவே தீட்டியது.

பக்கத்திலிருந்த நண்பர், மெதுவாக ஆரம்பித்தார். இந்த Big Bang அப்படின்ன என்ன? மனுசன் தெரிஞ்சுகிட்டு கேக்குறானா தெரியாம கேக்குறானான்னு தெரியல. மேலாண்மை தொழிலில் இது ஒரு தொல்லை. ஆங்கிலம் அருமையாக பேசுவதால் அறிவாளிகள் என முடிவுக்கு வந்து விட முடியாது. அவர் மேலும் ஒரு அடி நீளத்திற்கு தாடி வைத்திருப்பதால் அந்த எண்ணம் இன்னமும் உறுதியாகிவிட்டது. மேலும் இவர்களின் கல்வி பின்புலமும் அறுதியிட்டு கூற இயலாதது.

IT எனில் எல்லோரும் CS /MCA என முடிவு செய்துவிடலாம். ஆனால் டேமேஜர் வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியம் இல்லை. பொட்டுகடலை, புண்ணாக்குவிக்கிறவன் முதல் bsc bcom ba அது இது என பல பின்புலத்திலிருந்து வேலைக்கு வந்திருப்பார்கள். சரி கதைக்கு வருவோம்.

இந்த Big Bang அப்படின்ன என்ன? - சற்று யோசித்து தான் ஆரம்பித்தேன். அவன் எதற்காக இதை கேட்க வருகிறான் என எனக்கு நன்றாகவே தெரிந்தது. எனினும் எந்த விவாதத்திற்குள்ளும் செல்லாமல், அணுக்களின் மோதல், கதிர்வீச்சு, புதிய அணுத்துகள், Big Bang, possible creation of universe, CERN, etcetc என விவரித்தேன்.

இந்த ஆராய்ச்சி வெற்றி பெறுமா என்று கேட்டார். பெறும் அதற்கான ஆயத்தங்கள் சிறப்பாகவே இருக்கிறது, மேலும் pure science'ல் வெற்றி தோல்வி என்று எதுவுமில்லை, ஏனெனில் நீங்கள் எதையும் எதிர்பார்த்து ஒரு சோதனையை செய்வதில்லை என்றேன். அமைதியாகிவிட்டார்.

இன்று மழை பெய்தது காலை. முதல் கோடை மழை பெங்களூருக்கு. இன்றும் cab ஏறினேன். தாடி நண்பர் அமர்ந்திருந்தார். அந்த Big Bang சோதனை வெற்றியா என்றார். ஆம் வெற்றி தான்’ என்றேன் நான். ஆழ்ந்த அமைதியுடன் சில கணம் யோசித்தார் (ஒரு ஞானி ரேஞ்சுக்கு நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்) அப்புறம், உலகம் எப்படி படைக்கபட்டது என்பதை மனிதனால் கண்டுபிடித்து விட முடியாது என தீர்க்கமாக கூறினார்.

தாடிக்காரர்களிடம் விவாதிப்பதில்லை என்பது என் அடிப்படை முடிவு, இருந்தும் அமைதியாக கூறினேன், “இந்த உலகம் கோடான கோடி வருடங்களாக இங்கே இருக்கிறது, ஆனால் அறிவியல மிகவும் இளமையானது, சில நூறு வருடங்களாகத் தான் அடியெடுத்து வைக்க ஆரம்பித்து இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதே மாதிரியான, இன்னும் மோசமான எதிர்ப்புகளை சந்தித்து, மெல்ல மெல்ல தன் முயற்சியில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்றில்லாவிட்டலும் என்றாவது ஒருநாள் மனிதன் அந்த முடிவான கணத்தை அடைவான், It'll take its own time என்று கூறி அமைதியானேன்.

சற்று நேரம் கழித்து, படைத்தவன் மகிழ்ச்சியானதால் தான் இன்று மழை பெய்தது மேலும் படைத்தவன் மகிழும் கணத்தில் பெண் குழந்தைகளை தருவான் என்றார். அந்த ஆளுடன் இவ்வளவு நேரம் பேசியதற்காக ஷீவை கழட்டி அடித்துகொள்ளலாமா என சிந்தித்தேன், மனதில் அடித்தும் கொண்டேன். இப்படி ஒரு வடிகட்டின முட்டாள் தனத்துடன் இவர்களுக்கெல்லாம் எதற்கு big bang குறித்த கவலைகள்? இந்த மடையனுக்கா நான் electron, proton, sub atomic particles என்று விவரித்து அறிவியலை கேவலப்படுத்தினேன் என நொந்துகொண்டேன். இதில் என்னை குத்தி காட்டுவது வேறு, நான் பெண்குழந்தைக்கு ஆசைப்பட்டு ஆண் குழந்தையாகிவிட்டது. அதை குத்திகாட்டுகிறாராம்!!

இவனுங்கள நெனச்சா கண்ணு மூக்கு காது எல்லாமே கட்டுதேடா அய்யா... என்ன ஆளவிடு. இஸ்லாம் என்றால் சிந்திக்கவே கூடாது என்று சொல்லி குடுப்பாங்களோ, இல்ல தாடி வளர்த்தா மட்டும் சிந்திக்க கூடாது என்று பத்வா போட்டுடுவாங்களோ??

5 கருத்துகள்:

தோழி சொன்னது…

thevaiyaa ungalukku. thoongarathunnu mudivu panna atha mattum pannanum. ha ha ha

Unknown சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்... ஏதோ தாடிக்கார புள்ள அறிவியல பத்தியெல்லாம் கேக்குதே.. அவனுக்குள்ள ஒரு அப்துல்கலாம் தூங்கிட்டு இருக்காறோன்னு தப்பா நெனச்சு டேமேஜ் ஆயிட்டேன்.. என்ன பன்ன.. :(

உமர் | Umar சொன்னது…

//அந்த ஆளுடன் இவ்வளவு நேரம் பேசியதற்காக ஷீவை கழட்டி அடித்துகொள்ளலாமா என சிந்தித்தேன்,//

அடிச்சிக்கவெல்லாம் வேண்டாம். ஷுவைக் கழட்டி இருந்தாலே போதும், அதற்கு பிறகு இது போன்ற ஜென்மங்கள் வாயைத் திறக்காது.

Trails of a Traveler சொன்னது…

nalla venum.. ithukku thaan naangallam cabla erina.... zzzzz

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கருத்துரையிடுக