புதன், 24 மார்ச், 2010

இராமநவமி சுண்டல்

இராமநவமி கர்நாடகாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாநகராட்சி தேர்தல் நேரம் என்பதால், சந்து பொந்தில் இருக்கும் கோயிலில் எல்லாம் Unofficial அன்னதானம் மற்றும் அரசியல் கட்சிகளின் போட்டி சாப்பாடு என ஒரே கொண்டாட்டம் தான். பிஜேபி’யின் ஆஸ்தான நாயகன் ராம் எனவே அவர்களின் வேண்டுதல்களும், அன்னதானமும் களை கட்டியது.

மணிக்கொரு கும்பல் வீட்டு கதவை தட்டி ஓட்டு கேட்டு, எங்களின் பெயர் பட்டியலில் இல்லை என்பதில் மிகவும் கவலையுற்று, சோகத்துடன் திரும்பியது. தரைத்தள வீட்டில் இருந்தால் இந்த இனிய தொல்லைகள் அனுதினக்காட்சிகள். (சீக்கிரம் பெயர்பட்டியலில் இணைக்க வேண்டும்: தேர்தல் சமயத்தில் 1000-2000 தேறும் :) )

சரி ராம் கதைக்கு வருவோம். Corporate Disucssion / Lunch Talks ஒரு அபாயகரமான ஏரியா. எதை தொடுவது எதை விடுவது என யோசித்து யோசித்து பேச வேண்டி இருக்கும். தின்ன உக்காரும் கூட்டத்தை பொறுத்தும் அதுமாறுபடும். முஸ்லீம் பசங்கள் வச்சிகிட்டு பாகிஸ்தான், தீவிரவாதம் என்று பேசுவது கஷ்டம். நம்மள் வச்சிகிட்டு காவிரிய பத்தி பேச பெங்களூர் பசங்களுக்கு கஷ்டம். கல்யாணமாகியிருந்தா பிகர் குறித்து பேசுறது இன்னமும் தொல்லை. இதில் போன வாரம் ஒரு சுவாரஸ்யமான விவாதம் நடந்தது.

14 வருசம் காட்டுல சுத்துன ஜோடிக்கு ஏன் குழந்தை இல்ல? இராவணன் கிட்ட இருந்து வந்த பின்னாடி தான லவ குசா ராமாயணத்துல எண்ட்ரி, அதனால அது இராவணனோட குழந்தங்க அப்படின்னு ஒரு தரப்பு எடுத்து விட... உள்ள நுழையலாம வேணாவான்னு எனக்கு ஒரே குழப்பம்.

அதுவும் சரிதான். எல்லாம் தெரிந்த ராமனுக்கு அது தன்னோட குழந்தைங்க என்பது தெரியாதா?? அப்படி இல்லாத பட்சத்தில் தானே மனைவி மீது சந்தேகம் மற்றும் அவளை காட்டுக்கு துரத்தல்?? கடவுள் மனித அவதாரத்தில் இருந்தாலும், அடிப்படை நாள் கணக்கு கூடவா தெரியாது, அது தன் குழந்தையா இல்லையா என அறீய?? எழவெடுத்தவன் அந்த கணக்கு கூட தெரியாம என்னத்தடா ஆட்சி செஞ்சிருப்பான்?

அடுத்த கேங்: இல்லடா... அந்த ஆளபாத்தாலே ஒரு மாதிரியா இருக்கான்.. இதுல ஒரு தம்பி கூட ஓவர் கனெக்சன்... ஒருவேள அவனா நீயீ மாதிரி இருக்குமோ... அதனால தான் 14 வருஷம் பிள்ளை இல்லையோ?? - எனக்கு இது கொஞ்சம் அதிகமாகவே பட்டது. திருநங்கைகளையே அரவணைக்கும் மனப்பக்குவத்தில் இந்த முன்னெடுப்பு சரியான திசையில் செல்வதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நண்பர் விடாமல் - அந்த ஆள் அந்த மாதிரி கேசுன்னா எதுக்கு சும்மா ஒரு புள்ள வாழ்க்கையா பாழாக்கனும், அப்புறம் அவள காட்டுக்கு அனுப்பனும், இதுல சாமி காமின்னு யோக்கியத வேற எதுக்கு?? தம்பி கூடவே சந்தோசமா இருந்த்து தொலைக்க வேண்டியதுதான...

பெங்களூரில் நிலவும் multiculture, multi dimensional thought process’ல் அலசப்படாத கருத்துக்களே இல்லை எனலாம். அதில் ராமனின் டிரவுசரும் கழட்டப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது எந்த வலையிலும் பெண்மையை இழிவுபடுத்தும் பதிவல்ல. சீதா என்ற பெண் உண்மையே என்றால் அந்த பெண் சிந்தியா கண்ணீரே, இன்றளவும் ராமன் என்ற பாத்திரத்திற்கு கிடைக்கும் அனைத்து அவமரியாதைக்கும் அடிப்படை என்றே நினைக்கிறேன்.


1 கருத்து:

பனித்துளி சங்கர் சொன்னது…

அடடா ....ராமரோட கஷ்டகாலம் இன்னும் முடியலையா?

கருத்துரையிடுக