திங்கள், 29 மார்ச், 2010

உயிர்ப்பு

தேடிவந்து தெரிவிக்கப்படும் அன்பு
ஆர்வமற்று புறக்கணிக்கப்படுகிறது
மழைநேரத்தில் கீழிறங்கும் இலையின்
கவனிப்பாரற்ற பிரிவைப்போல
புதுப்புனலின் செம்பட்டை நீரில்
அடையாளமற்று சகதியில் மக்கும்

மெல்லியவெயில் பிரதிபலித்து
உங்கள் கவனம் பறிக்கும்
பசுந்தளிரின் இளநரம்புகளில்
குதுகலங்கொண்டு பாயும்
உயிர்மையின் அடையாளங்கள்
உங்களுக்கு பரிச்சயமான ஒன்றுதான்
உதிர்வதெல்லாம் உயிர்த்தெழுமென்பதை
நீங்கள் அறிந்திருக்கும்வரை.

உயிர்த்தெழுதலின் சாட்சி நீங்களாகவே
இருக்கப்போவதில்லை எப்பொழுதும்
என்பதை அறிந்திருக்கும்வரையிலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக