வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வானவில் தீண்டல்

உன்னை பார்த்து ஒருநிமிடம்
தான் ஆயிற்று அதற்குள்
கணிணித் திரையில்
கவிதை வரிகள்

இதயம் இருப்பதை
நிறுத்தி நிறுத்தி
உணர்த்துபவள் நீ
கண்கள் இருப்பதை
வெறித்து வெறித்து
ரசிப்பவன் நான்

இதுவரை எழுதிய
கவிதைகளில் உனக்கான
ஒன்றை தேடிவைத்தேன்
உன்பெயரை கண்டநொடியில்
கூட்டுத்தற்கொலை
குறிப்பெழுதிவைத்தது
கவிதைகள்

நீ ஒரு sweet romance
Post Modernism புக மறுக்கிறது
வரிகள்

அருவித்துரும்பு நான்
வீழ்ச்சியின் ஈரத்தில்
உன் வானவில்
தீண்டல்

5 கருத்துகள்:

Trails of a Traveler சொன்னது…

etho romantic moodla thaan suthara.. nadathu nadathu..

Ram

Unknown சொன்னது…

ஹி ஹி ஹி... அது வந்து... :)

ராஜ சேகர் சொன்னது…

சந்தேகமே இல்ல.. கண்டிப்பா ஒரு சூறாவளி உன்ன சுழட்டி அடிச்சிட்டு இருக்கு.. தாங்க முடில தம்பி உன் காதல் பித்து..

ஆனாலும் கவிதை ரொம்ப இளமையா அருமையா இருக்கு..!!

நிலாரசிகன் சொன்னது…

:)

Unknown சொன்னது…

நன்றி ராஜ். நிலா ரசிகன், உங்கள் புன்னகைக்கு நன்றி. காதல் கவிதை எழுதிட்டா எல்லோரும் நம்மள காமெடியா பாக்குறதே பொழப்பா போச்சு... மனிதர் உணர்ந்து கொள்ள இது..... :)

கருத்துரையிடுக