புதன், 21 ஏப்ரல், 2010

இசையாய் புணர்ந்தவெளி

இளையராஜாவின் பாடல்களில்
மட்டுமே காதல் இன்னமும்
வாழ்வதாக நாம் கொண்டிருந்த
நம்பிக்கை இன்றளவும்
தன்னை புதுப்பித்து
வழிகிறது ஏமாற்றம்
புனைந்த விழியோரம்


நினைவுகளின் அடுக்கில்
நுழைந்து நம்மை குதறும்
சூழலின் வண்ணம்
வெறுமை நிறைந்த
இருளின் நிறமாகவே
இருப்பது தற்செயல்
ஒற்றுமையல்ல
தீண்டல் விளையாட்டின்
வெறித்த விட்டங்கள்
பிரிவின் வலிஅறிந்தவை
வண்ணங்கள் அற்றவை

கால்கள் புணரும்
பலகையின் ஓலம்
அறையை நிறைக்கும்
சீரற்ற நகர்வில்
தொக்கிநிற்கும் வெறுப்பின்
வலியுணர்ந்து தரையலறும்
இருளை குடிக்கும்
ஒலியின் ராகம்
ஒப்பாரி என்பது
உன்னைப்போலவே
எங்கோ வெறிக்கும்
இருள்மூலைகள் மட்டுமே
அறிந்த ரகசியம்

வெளியில் மிதக்கும்
இசையின் துண்டொன்று
எந்நொடியிலும் துளைக்குமென்ற
எதிர்பார்ப்புடனே அனுதின
புணர்வின் களம்
வறண்ட கண்ணீரை
மொழிபெயர்த்தறியும் குழலின்
துளைகளில் நிகழும்
வன்புணர்வில் குறிகளின்
குறிப்புகள் அல்லது
இசையாய்ப் புணர்ந்தவெளி

2 கருத்துகள்:

Priya சொன்னது…

//நினைவுகளின் அடுக்கில்
நுழைந்து நம்மை குதறும்
சூழலின் வண்ணம்
வெறுமை நிறைந்த
இருளின் நிறமாகவே
இருப்பது தற்செயல்//.....நல்லா இருக்கு இந்த வரிகள்!
அழகான கவிதை!

Unknown சொன்னது…

Thanks Priya. அழகான கவிதை! Your comment made it more beautiful. :)

கருத்துரையிடுக